சிப்காட் அமைக்க பசுமை நிலம் அன்னூரை தேர்ந்தெடுப்பதா?? கோவை விவசாயிகள் எதிர்ப்பு போராட்டம்!
- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.

- அன்னூரில் சிப்காட் அமைப்பதற்காக 3731 ஏக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. கோயம்புத்தூர் காரணம்பேட்டை சுல்தான்பேட்டை போன்ற வறண்ட நிலங்களை விட்டுவிட்டு, சிப்காட் அமைப்பிற்கு பசுமை நகரமான மேட்டுப்பாளையம், அன்னூரை தேர்ந்தெடுத்ததற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- மேலும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர். அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

- முன்னதாக “நமது நிலம் நமதே” போராட்ட குழுவின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300’க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடந்தது.
- இதன் தொடர்ச்சியாக இன்று அன்னூர் தாலுகா அலுவலகம் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட்டு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும், எங்களுக்கான நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர். அடுத்தகட்ட நடவடிக்கையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
User Rating:
5
( 1 votes)
Back to top button