Site icon ழகரம்

பாஜக உமா ஆனந்தன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பா.ஜ.க வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 வாக்குக்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்ததாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வந்த நிலையில், 5,539 வாக்குகள் பெற்று உமா ஆனந்தன் வெற்றி பெற்றதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் பா.ஜ.க சார்பில் உமா ஆனந்தன் என்பவர் போட்டியிட்டார்.

இந்த நிலையில் இன்று மாலை, சென்னை மாநகராட்சியின் 134 வார்டில் வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து, பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் 5,539 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Exit mobile version