செய்திகள்தமிழ்நாடு

‘நம்மை காப்போம் – 48’ திட்ட செயல்பாடு; மதுரை அரசு மருத்துவமனை முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

விபத்துகளில் காயமடைந்தவர்கள் உயிரைக் காப்பாற்றும் ‘நம்மை காப்போம்-48’ மருத்துவத் திட்டத்தில் தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனை முதலிடம் வகித்ததற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம் ஆகிய இடங்களில் புதிய துணை சுகாதார நிலையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர், முடநீக்கியல் மற்றும் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெறும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதன்பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ”மதுரை மாவட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஒட்டுமொத்த தென்னக்கத்திற்கே மிகப்பெரிய மருத்துவ பயன்பாடு உள்ள மருத்துவமனையாக திகழ்கிறது. கடந்த டிசம்பர் 21ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.40 லட்சத்தில் எலும்பு வங்கி திறக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எலும்புவங்கி அமைப்பது இதுவே முதல்முறை. தற்போது மருத்துவமனைகளில் எலும்பு வங்கி பயன்பாடு மிகப்பெரிய தேவையாக உள்ளது.

கோவையில் ஒரு தனியார் மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டுமே எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்கிறது. தற்போது தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் இதுபோன்ற எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கிறது. தற்போது அந்த எலும்பு வங்கியில் உயிரிழந்த 36 நோயாளிகளிடம் இருந்து எலும்புகள் கொடையாக பெறப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புகளைக் கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு போலீஸ்காரர், கபடி வீரர், வாலிபால் வீரர் உள்பட விபத்துகளில் காயமடைந்த 7 பேருக்கு எலும்பு மற்றும் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button