செய்திகள்உலகம்

போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா பிரதமர்கள் யுக்ரேன் வருகை

போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் அனைவரும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கியை சந்திப்பதற்காக கீயவுக்குச் செல்கிறார்கள்.

யுக்ரேனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவை உறுதிபடுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று போலந்து அரசாங்கத்தால் இந்த விஜயம் உறுதி செய்யப்பட்டது.

“இந்த விஜயத்தின் நோக்கம், யுக்ரேன் அரசு மற்றும் அதன் மக்களுக்கு பரந்த ஆதரவை வழங்குவதுதான்,” என்று போலந்து அரசு தெரிவித்தது.

மேலும், சுதந்திரத்திற்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட அதிகாரப்பூர்வ ஐரோப்பிய கவுன்சிலின் விஜயம் என்று செக் பிரதமர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button