கொரோனாவை விட புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு
மேற்கு ஆப்ரிக்காவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது பறக்கும் வவ்வால்களில் இருந்து மனிதனுக்கு பரவுகிறது.

இந்த கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒன்று , இரண்டு மூன்று என அடுத்து அடுத்து தொற்று பரவி கொண்டு வருகையில், இந்த பிரச்சனையில் இருந்தும், இதன் பாதிப்புகளில் இருந்தும் இன்னும் மீண்டும் வரவில்லை. இது மிகவும் பெரிய ஆபத்தாக இருந்து வந்து கொண்டு இருக்கிறது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கொண்டு இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து வந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் மேற்கு ஆப்ரிக்காவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது பறக்கும் வவ்வால்களில் இருந்து மனிதனுக்கு பரவுகிறது.
மேற்கு ஆப்ரிக்காவின் கினியாவில், மார்பர்க் என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது என உலக சுகாதார நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. இந்த வைரஸ், எபோலா, கொரோனா போன்று விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது என கண்டு பிடித்து உள்ளனர்.
வவ்வால்களிடம் இருந்து பரவும் இந்த மார்பர்க் வைரஸ் ஆனது 88% இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி இறந்த ஒருவரின் மாதிரிகளை பரிசோதனை செய்யும் போது தான் இந்த புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது
உலக சுகாதார அமைப்பின் ஆப்ரிக்காவுக்கான பிராந்திய இயக்குநர் மத்ஷிடிசோ மொய்தி கூறுகையில், இந்த மார்பர்க் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இது எதன் மூலம் வேகமாக பரவுகிறது என கண்டறிந்து அதை தடுக்க வேண்டும். எபோலா போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் போன்று இதையும் தடுப்பதற்கு முன்னேர்ச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பொதுவாக, குகைகள் அல்லது சுரங்கங்கள், குடியிருப்பு காலணிகள் மூலம், ஆகியவற்றில் இருக்கும் வவ்வால்களிடம் இருந்து பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வியர்வையில் இருந்து இது பரவுகிறது என உலக சுகாதார சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இப்படி புது புது வைரஸ் வந்துகிட்டே தான் இருக்கும். மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து வைரஸ்களும் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளது. நம்மால் முடிந்தது, எந்த நோயும் வராமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மட்டுமே.