
தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளது. நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முடிந்த நிலையில், இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு முடிவு பெற்றது . அதேபோல் திருச்சி பெரிய சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவு பெற்றது.
12 காளைகளை அடக்கிய புதுக்கோட்டையைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் முதல் இடம் பெற்றுள்ளார். அவருக்கு பரிசாக இருசக்கர வாகனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 9 காளைகளை பிடித்த திருச்சி பூலாங்குடியை சேர்ந்த மனோஜ்க்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (29) எனும் வீரர், காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.