
உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் அலுவல் பணி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகள் நேற்றுடன் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பெயர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது. இதனால் அவர் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார்.
- புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மூத்த நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க தடை விதிக்க கோரி முர்சலின் அசிஜித் சேக் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- அந்த மனுவில், ‘நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த சில உத்தரவுகள் முரண்பாடுகளை கொண்டுள்ளன, எனவே, அவர் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, அடிப்படை ஆதாரமின்றி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.