Site icon ழகரம்

நீட் விலக்கு மசோதா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் …..!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்

ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

தமிழக சட்டமன்றத்தில் 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு மசோதா உள்பட, பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரை மு.க. ஸ்டாலின் வலியுறுத்தத்தியதாகவும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் உறுதியளித்ததாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version