
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 28,14,276. சென்னையில் மட்டும் 5,94,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,14,643.
இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 37 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் 6190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,450 பேருக்குத் தொற்று உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 62,767.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5,77,19,579
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,34,417
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 28,14,276.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை: . 13,990
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை: 6190
* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 8680
மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 16,42,998 பேர். பெண்கள் 11,71,240 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 8,307 பேர். பெண்கள் 5,683 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,547 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 27,14,643 பேர்.
* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்தனர். 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,866 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8680 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 11 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் யாருமில்லை.
இன்று மாநிலம் முழுவதும் 37464 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 21593 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9323 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு; இன்றைய நிலவரம்:
* மொத்த பாதிப்பு: 185.
* டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 179.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.