செய்திகள்
தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்து 19 பேர் பலி!!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில்....

தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
- கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.
- இந்த விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உட்பட மொத்தம் 43 பேர் இருந்தனர். விமானம் சுமார் 100 மீட்டர் (328 அடி) நடுவானில் இருந்தபோது, அது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.