மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதிக்க ஏதுவாக பிற அலுவல்களை ஒத்திவைக்கும் அவசர கவன ஈர்ப்பு நோட்டீஸை திமுக அளித்துள்ளது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பின் 200ஆவது பிரிவை மீறும் வகையில் உள்ளதாகவும் அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நோட்டீஸ்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களாலும் மக்களவை, மாநிலங்களவை செயலகத்தில் கூட்ட அமர்வுக்கு முந்தைய நாளில் தரப்படுவது வழக்கம்.
அவற்றை அனுமதிப்பதா வேண்டுமா என்ற தமது முடிவை மக்களவையில் சபாநாயகரும், மாநிலங்களவையில் அதன் தலைவர் அல்லது அவையை வழிநடத்தும் மூத்த உறுப்பினர் அன்றைய நாளுக்கான கூட்டத்தின் தொடக்கத்தில் அறிவிப்பார்கள்.